யாரோ ஆண்டவனாம்
சிலகாலம் மனிதர்களோடு
வாழ்ந்துவிட்டு போகலாமென
பூமிக்கு வந்திருப்பதாய்
விடிகாலை கனவில் வந்து
நாரதன் ஒருவன் சொல்லி சென்றான்;
அவனைத்தேடி நான் போக எத்தனிக்க
வாசலுக்கு வெளியே யாரோ ஒருவன்
வாடகைக்கு வீடுத்தேடி
விசாரித்து கொண்டிருந்தான்;
நான் காலி செய்த வீட்டையே
அவனுக்கு சொல்லிவிடலாமென தோன்றிற்று;
வணக்கம் வைத்து வரவேற்று
அவனுக்கான வீடு நோக்கி நகர்ந்து சென்றோம்!
வள்ளுவனே வாடகைக்கு குடிபுகுந்தால்
குறளில் சொல்லாத நான்காம் அதிகாரம்
அவனையும் சோதித்து பார்க்கலாம்;
அறம் பொருள் இன்பத்தோடு
வீடுபேறே கிடைத்தாலும்
சொந்த வீடில்லாமால் வாழ்வது வீண்
என்றிருப்பானென்றேன்;
மறுதலிப்பு ஏதுமில்லாமல்
என்னை பார்த்து புன்னகைத்தான் அவன்!
விலை நிலங்களெல்லாம் மனைகளாவதற்கு
வாடகை தந்தும் வசவுகளை வாங்கும்
இடைநிலை குடும்பத்தினருக்கு
சொந்தமாய் ஒரு வீடு இல்லாததுதான்
காரணமாய் இருந்திருக்கலாமென்றேன்;
ஒன்றுமே சொல்லவில்லை அவன்
தலையை கூட சற்று தாமதமாகவே ஆட்டினான்!
ஆண்டவனாகவே இருந்தாலும்
வீட்டு உரிமையாளரிடம்
அடிபணிந்துதான் போகவேண்டுமென்றேன்;
இதுபோல பல இலவச அறிவுரைகளை
கேட்டுக்கொண்டிருந்தவன்
வெகுநேர மௌனத்திற்கு பிறகு
பேச தொடங்கினான்;
நானே ஆண்டவன் தானென்றான்!
நாரதன் சொன்னது நினைவுக்கு வந்தது
ஆச்சரியத்தோடு அவனை பார்த்து
கட்டியணைத்து ஆறுதல் சொன்னேன்
விதி வலியதென்று!
கண்கள் விழித்து பார்த்தேன்
இப்போதுதான் கனவு முடிந்திருக்கிறது போல;
உண்மையிலேயே வாசலுக்கு வெளியே
யாரோ காத்துக்கொண்டிருப்பது போலிருந்தது;
ஒருவேளை அவர்
வாடகை வசூலிக்க வந்த
வீட்டு உரிமையாளராக இருக்கலாம்!
சிலகாலம் மனிதர்களோடு
வாழ்ந்துவிட்டு போகலாமென
பூமிக்கு வந்திருப்பதாய்
விடிகாலை கனவில் வந்து
நாரதன் ஒருவன் சொல்லி சென்றான்;
அவனைத்தேடி நான் போக எத்தனிக்க
வாசலுக்கு வெளியே யாரோ ஒருவன்
வாடகைக்கு வீடுத்தேடி
விசாரித்து கொண்டிருந்தான்;
நான் காலி செய்த வீட்டையே
அவனுக்கு சொல்லிவிடலாமென தோன்றிற்று;
வணக்கம் வைத்து வரவேற்று
அவனுக்கான வீடு நோக்கி நகர்ந்து சென்றோம்!
வள்ளுவனே வாடகைக்கு குடிபுகுந்தால்
குறளில் சொல்லாத நான்காம் அதிகாரம்
அவனையும் சோதித்து பார்க்கலாம்;
அறம் பொருள் இன்பத்தோடு
வீடுபேறே கிடைத்தாலும்
சொந்த வீடில்லாமால் வாழ்வது வீண்
என்றிருப்பானென்றேன்;
மறுதலிப்பு ஏதுமில்லாமல்
என்னை பார்த்து புன்னகைத்தான் அவன்!
விலை நிலங்களெல்லாம் மனைகளாவதற்கு
வாடகை தந்தும் வசவுகளை வாங்கும்
இடைநிலை குடும்பத்தினருக்கு
சொந்தமாய் ஒரு வீடு இல்லாததுதான்
காரணமாய் இருந்திருக்கலாமென்றேன்;
ஒன்றுமே சொல்லவில்லை அவன்
தலையை கூட சற்று தாமதமாகவே ஆட்டினான்!
ஆண்டவனாகவே இருந்தாலும்
வீட்டு உரிமையாளரிடம்
அடிபணிந்துதான் போகவேண்டுமென்றேன்;
இதுபோல பல இலவச அறிவுரைகளை
கேட்டுக்கொண்டிருந்தவன்
வெகுநேர மௌனத்திற்கு பிறகு
பேச தொடங்கினான்;
நானே ஆண்டவன் தானென்றான்!
நாரதன் சொன்னது நினைவுக்கு வந்தது
ஆச்சரியத்தோடு அவனை பார்த்து
கட்டியணைத்து ஆறுதல் சொன்னேன்
விதி வலியதென்று!
கண்கள் விழித்து பார்த்தேன்
இப்போதுதான் கனவு முடிந்திருக்கிறது போல;
உண்மையிலேயே வாசலுக்கு வெளியே
யாரோ காத்துக்கொண்டிருப்பது போலிருந்தது;
ஒருவேளை அவர்
வாடகை வசூலிக்க வந்த
வீட்டு உரிமையாளராக இருக்கலாம்!
- இரா.ச.இமலாதித்தன்