அதுவொரு நிலாக்காலம்!



முத்தம் ஒன்றை வாங்கிடவேண்டி
தவம் கிடக்கும் கன்னம் போலவே
நித்தம் என்னை சுற்றி
மூன்றைந்து நாட்களுக்குள்
முகம் மறைக்கும் முழு நிலவும்
முற்ற கடலில் மிதந்து வந்து
உலவுகின்ற அந்திவேளை
இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
எதுவாயினும் அதுவொரு நிலாக்காலமே!

- இரா.ச.இமலாதித்தன்