நீயே நானாகினேன்!
















-01-

அருகிலிருந்தும் பேச முடியாத சந்தர்ப்பங்களில்,
கண்கள் உன்னைத்தேடியே உற்று நோக்கும்;
உடல் மட்டுமே இங்கிருக்க,
அங்குமிங்கும் ஊசலாடும்
இந்த உயிருக்கு மோட்சம் கொடு!

-02-

நீயேதான் நானாக இருக்கிறாய்.
நீ நானானது எப்போதென யோசிக்கும் போதே
நான் தொலைந்து, நீயே வருகிறாய் நானாக!
நீ யாரென சொல்லிவிடு,
நான் நீயாகிவிட்டேன்!

-03-

நீ அருகிலில் இல்லாத நாட்களெல்லாம்
வறண்டு போய்விடுகிறது மனது.
உன்னை தேடியே தவம் கிடக்கிறது என் கண்கள்;
சீக்கிரம் வந்து நிவாரணம் தந்து விடு!

-04-

நம்மிருவருக்கும் இடையிலுள்ள
infinity அளவிலான Emotionகளை,
வெறும் Emoticon's தான் பரிமாறி கொள்கின்றன;
ஆனால் மனமோ 2G போல பரிதவித்து கிடக்கிறது!

-05-

நீ பாதரசம் போல பட்டும் படாமலேயே பழகுகிறாய்.
நான் தான் ஆக்ஸிஜனாய்
பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன்.
இன்னும் நமக்குள்
இந்த கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகவேயில்லை!

- இரா.ச.இமலாதித்தன்