நீ கடவுளில்லை
துண்டாக சிதறிக்கொண்டிருக்கிறது
எதிர்கால வாழ்வியல்!
உன்னாலேயே உருவாக்கப்பட்டது
உனக்கான எல்லைகள் - அது
விரிவடைந்து விட்டதாகவே
கற்பனைகளுக்குள் மூழ்கிவிட்டாய்!
நீ இரவலாய் வந்த வெற்றுடல்
புகழிடம் தேடிய நீயுமொரு வந்தேறி
குழுமியிருந்த பலரால் விரட்டப்பட்டும்
உடலால் சிலரையும் வென்றாலும்
உன் காலடி யாருக்கு சொர்க்கம்
பெரும்பணத்துக்கும் சிறுபுகழுக்கும்
சிலருடல் அடிமைசாசனம்!
நீ மதம் கொண்ட மானுடம்
ஆன்மீகம் உன் ஆறுதல்
பலர் மனம் கொன்ற வெண்ணுடல்;
உன்னை கட்டுப்படுத்த
கேடயமென்ற ஆயுதம் வீண்
புரிந்து கொண்டோம்;
தன்னையே அழித்துக் கொள்ளும்
நீ ஆணவத்தீ!
பிழை செய்து கொண்டே
பெரும்துரோகம் செய்கின்றாய்
உன்மீதான மாயை புகழ் பதவி
உயிருடல் என்ற இத்யாதிகளின்றி
நீயுமொருநாள் இல்லாதிருப்பாய்
அதன்பின்னும் உனக்கும் சில
நினைவேந்தல் நிகழ்வு
ஊருக்கொன்று நடைபெறும்
ஆனாலும் நீ கடவுளில்லை!
துண்டாக சிதறிக்கொண்டிருக்கிறது
எதிர்கால வாழ்வியல்!
உன்னாலேயே உருவாக்கப்பட்டது
உனக்கான எல்லைகள் - அது
விரிவடைந்து விட்டதாகவே
கற்பனைகளுக்குள் மூழ்கிவிட்டாய்!
நீ இரவலாய் வந்த வெற்றுடல்
புகழிடம் தேடிய நீயுமொரு வந்தேறி
குழுமியிருந்த பலரால் விரட்டப்பட்டும்
உடலால் சிலரையும் வென்றாலும்
உன் காலடி யாருக்கு சொர்க்கம்
பெரும்பணத்துக்கும் சிறுபுகழுக்கும்
சிலருடல் அடிமைசாசனம்!
நீ மதம் கொண்ட மானுடம்
ஆன்மீகம் உன் ஆறுதல்
பலர் மனம் கொன்ற வெண்ணுடல்;
உன்னை கட்டுப்படுத்த
கேடயமென்ற ஆயுதம் வீண்
புரிந்து கொண்டோம்;
தன்னையே அழித்துக் கொள்ளும்
நீ ஆணவத்தீ!
பிழை செய்து கொண்டே
பெரும்துரோகம் செய்கின்றாய்
உன்மீதான மாயை புகழ் பதவி
உயிருடல் என்ற இத்யாதிகளின்றி
நீயுமொருநாள் இல்லாதிருப்பாய்
அதன்பின்னும் உனக்கும் சில
நினைவேந்தல் நிகழ்வு
ஊருக்கொன்று நடைபெறும்
ஆனாலும் நீ கடவுளில்லை!
- இரா.ச.இமலாதித்தன்



