பராபரனே!



கண்ணீர்த்துளி போன்ற
இராவண தீவுக்குள்
ஓயாத அலைகளாய்
உயிராயுதம் ஏந்தும்
மாவீரர்களை உருவாக்கி
கரும்புலி துணையால்
வரும்பகை அழித்த
பரம்பொருளான பராபரனே;
ஆறுமுகன் போல
ஆறெழுத்தில் வீறுகொண்டு
தமிழினத்தின்
தலையெழுத்தை மாற்றிய
தலைவனவன் பிரபாகரனே!

- இரா.ச.இமலாதித்தன்

தமிழ் தேசிய தலைவா, 60ம் அகவை வாழ்த்துகள்!

‎தமிழ் தேசிய தலைவன்‬!



"பி"ழையில்லா
"ர"ம்பொருள் போல
கோட்"பா"டு கொண்ட
போர்க்"க"ளங்களால்
சுதந்தி"ர" தமிழ்நாட்டிற்கான
முருகனானா"ன்"
என் பிரபாகரன்!

- இரா.ச.இமலாதித்தன்