குழப்பம்!


எதையோ இழந்ததை போல்
ஒரு மாயை;
பெரும்சுமையை சுமக்கிறது
சின்னஞ்சிறு மனது;
அழுததுபோல் சிவந்திருந்த
கண்களுக்குள் ஈரமேதுமில்லை;
உணரமுடியா கவலை
வியாபித்திருக்கும் வேளையில்
உடலெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது
ஏதோவொரு தீரா யோசனை;
இழப்பென்பது இயல்பென்றாலும்
இன்னமும்
குழப்பம் மட்டுமே
மிச்சமிருக்கிறது பதிலாக!

- இரா.ச.இமலாதித்தன்