பிரிவின் வலி!


















001.

எனக்கான வருடத்தில்
365 நாட்கள் வருவதேயில்லை;
உன்னை காணாத நாட்களெல்லாம்
நாட்காட்டியிலிருந்து
கிழிக்கப்படாமலேயே
வெறுமையாய் கடந்து செல்வதால்!

002.

வெறும் ஐம்பது மைல் தொலைவு கூட
இந்த ஒரு நாளில்
அண்டார்டிகா கண்டத்திலுள்ள
தூரம் போல உணர வைக்கிறது
என்னருகில் நீ இங்கில்லை!


 003.


நேற்றை கடந்து விட்டு வந்த
இன்றும் கூட
நாளை கடந்து விடும்;
நேற்றால் இன்றை இழக்கிறேன்,
நாளை என்ன வைத்திருக்கிறாய்?
நான் இழப்பதற்கு!

- இரா.ச.இமலாதித்தன்

காதலும் கடவுளும்!




















001.

தாமரை நீ
அதன் இலை நான்
தண்ணீர் போல நம் நட்பு
விலகுதல் எளிது தான்
ஆனாலும் முடியவில்லை
இறையாய்
மனதினுள் நீ!


002.


நான் என்பதையே
கொஞ்சம் கொஞ்சமாய்
உன்னால் இழக்கிறேன்
நீ மட்டுமே
என்னுள் இருக்கிறாய்
இப்போது
நீ கடவுளா? காதலா?
குழம்பி நிற்கிறேன்!


003.


ஞானியின் நிலை
எதுவென தெரியாது
ஆனால் நான்
புற வாழ்வியல் எல்லையை
கடந்து விட்டதாய் உணர்கிறேன்
இறைவனிடம் எதை கேட்பதென்றே
தெரியவில்லை
என்னையே கேட்டுவிடவா?


- இரா.ச.இமலாதித்தன்