தன்னம்பிக்கை!




















வறண்டு போன மண்ணுக்குள்ளும்
இறந்து போகும் நாட்கள் எண்ணும்
ஒற்றை உயிரை வளர்த்தெடுக்க
வறண்ட நிலத்திற்க்குள்ளும்
வானில் விழிவைத்து
வேரின் வழித் தோண்டி
இதழ்கள் கரம் நீட்டி
புது வாழ்வை எதிர்நோக்கி
இருண்டு போனதொரு 
செடியின் பயணமும்
இனிதே தொடக்கமாகிறது 
தன்னம்பிக்கையுடன்!
                                          
 - இரா.ச.இமலாதித்தன் 

வழித்தடங்கள்!













 




தரிசு நிலங்களுக்கிடையில்
அவன் கடந்து செல்கின்ற
பல்வேறு திசையெங்கும் பரவி கிடக்கும்
ஒற்றை வழி பாதைகளின் 
தேய்ந்து போன கால் தடங்களெல்லாம் 
தன் மூதாதையர் விட்டுச்சென்ற வழியென்று
அவனுக்கு தெரிந்திருக்கலாம் - ஆனால்
அவனது காலணிக்குத்தான்
உணரும் பக்குவம் இல்லை
அவர்கள் பட்டுணர்ந்த வலியை...!

- இரா.ச.இமலாதித்தன் 

_