நீயும் காதலும்!

 

01.

உன்னை காணாத
ஒவ்வொரு வினாடியும்
வீணாய் போகிறதே யென்று
வருத்தத்துடன்
உரையாடிக்கொண்டிருக்கிறது
கடிகார முட்கள்!

----o0o----


02.

காதல் தவறில்லை
என்றுரைத்த
என் நண்பனிடம்
கோபப்பட்டத்தை
தவறென்று உணர்கிறேன்
இன்று
உன்னை கண்டபின்னால்!

----o0o----



03.

காதல் மறுப்பை 
பெருமிதமாய் பேசித்திரியும்
பெரியோர்கள் அறிவார்களா
பிறப்பின் அடித்தளமே
காதலென்று...!

----o0o----



04.

நான் பேருந்து படியினில்
தொற்றிக்கொண்டு
பயணம் செய்து வரும்
காலைநேர சாலையெங்கும்
உன் மீதான காதலும்
என்னோடு தொற்றிக்கொண்டு
பயணிக்கிறது
பேருந்தை விட்டு
நீ கீழறங்கி
சென்ற பின்பும்!

----o0o----



05.

காதல் இல்லையென்று
சுற்றித்திரிந்த
நாட்களையெல்லாம்
காட்சிப் பொருளாய்
நெஞ்சுக்குள் தேக்கி வைத்திருக்கிறேன்
உன்னிடம் காண்பிப்பதற்காய்!

----o0o----



   - இரா.ச.இமலாதித்தன்






இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.


_

சொல்லாத காதல்!



வறண்டு கிடக்கின்ற
பாலைவனத்து வெளியினூடே
காய்ந்து நிற்கும்
ஒற்றைமர கிளையின் மீது 
சுடுமணல் காற்றிலேறி
பற்றிக்கொண்ட பறவை போல
ஒட்டிக்கொண்டது
உன்மீதான
எனக்கான காதல்...!










உன் பெயரை
உதடு உச்சரித்து
உரைக்கும் முன்பே
காலங்கெட்டு போச்சுதென்று
கதை பேசும் கூட்டம் நடுவே 

கூனிக்குறுகி நின்று
என்னைப் பார்த்து
ஏளனமாய் சிரிக்கிறது
நான் சொல்லத்தவறிய

காதல்...!





- இரா.ச.இமலாதித்தன் 




இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.



_