கவிதை என்பது யாதெனில்!
















வெகு நாட்களாகவே 
கவிதையென்ற பெயரில் 
எதுவுமே எழுதவில்லையென்ற 
எண்ணத்திலேயே மூழ்கிக்கொண்டிருந்தான்; 
எதைப்பற்றி எழுதுவதென்று  
நீண்ட நேரமாக சிந்தித்தும் 
ஒன்றும் வசப்படபில்லை அவனுக்கு;
எதையாவது கிறுக்குவோம் 
யார் நம்மை கேட்பாரென்று 
ஏதோ ஒன்றை எழுத ஆரம்பிக்க  
தனித்தனி சொற்களனைத்தும்  
ஒருசில வரிகளாய் உருமாறிக்கொண்டிருந்தன;
இறுதியில் சிலவற்றை திருத்தி 
பொதுவில் காட்சிப்படுத்த 
ஆனந்தமாய் வாரஇதழுக்கு அனுப்பிவைக்க 
கிறுக்கியவையெல்லாம் பிரசுரமானது 
கவிதையென்ற அங்கீகாரத்தோடு!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக