அழகென்றால் அவள்!

















-001-

எது அழகென்பதை 
வரையறுத்து கொண்டிருந்தேன் 
வட்ட நிலவு 
வண்ணங்கள் நிறைந்த மலர்கள் 
மழலையின் சிரிப்பு 
மழைக்கால மேகம் 
நெல்வயலில் ஒற்றை மரம்
நெரிசல் நிறைந்த அலைகள் 
காலைநேர சூரிய உதயம் 
இப்படி ஏதோதோ 
வரிசையாய் நின்றன 
உன்னை பின்தொடர்ந்து!

-002-

பார்வை மட்டுமே 
வேலையென்று இருந்தேன்; 
புன்னகைக்கவும், 
சிறை பிடிக்கவும்,
மௌனமொழி பேசவும் 
எப்படி பழகிக்கொண்டன 
உன்னுடைய விழிகள்?

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

1 கருத்து:

கருத்துரையிடுக