நீயொரு பகுத்தறிவாதியா?













 
கடவுளில்லையென்றாய்
புதிய பாதை இதுதானென்றாய்
பின்னொருநாள் மதம் பிடிக்காதென்றாய்
சாதியத்தை எதிர்த்தாய்
சடங்குகளை குறைச்சொன்னாய்
இந்து மதத்தை மட்டும் உமிழ்ந்து பேசி
கரவொலி வாங்கினாய்!

கண்டதையெல்லாம் பேசித்தீர்த்தாய்
காணாததையும் கண்டேனென்றாய்   
தானொரு பகுத்தறிவாதியென்றாய்
மதமும்,கடவுளும் பொய்யென்று
மேடைகளில் பரப்புரை பலசெய்தாய்!
 
பிரிவினையில்லாத மதமே இங்கில்லை
என்பதை அறிய மறுத்து அறிவிலியாய்...
வேறெந்த மதங்களையும் எதிர்க்க
திராணியில்லாத வாய்ச்சொல் வீரனாய்... 
தான்சார்ந்த இந்து மதத்தை மட்டுமே குறைக்கூறி
கூச்சலிட்டு குதூகலம் அடையும் 
குறுகிய புத்தியையும் வளர்த்துக்கொண்டாய்!

உன்னருகில் கடந்து போகும் தாசியை
பத்தினியென்று கண்மூடி கிடந்தாய்
உன்னை ஈன்றெடுத்தவள் புறக்கணித்ததால்
தன் தாயின் கற்பின் மீதே களங்கம் பேசி
மேடைகளில் தாசியென்று முழங்கினாய்!

சிலை வழிபாட்டை எதிர்த்தவனுக்கே
காக்கைகள் எச்சமிட
தெருவுக்கொரு சிலை வைத்து
அந்த தலைவனையே கடவுளாக்கிய
போலி பகுத்தறிவியாதிகளின்
இதுபோன்ற மூடச் செயல்களைக்கண்டு
புல்லரித்து புளங்காகிதம்
அடைகிறேன்!

பகுத்தறிவாதியென்ற போர்வையில்
உம் அறியாமையை நினைத்து
குழம்பி நிற்கிறேன் நான்... 

இப்போதாவது சொல்
உண்மையில் நீயொரு பகுத்தறிவாதியா...?



            - இரா.ச.இமலாதித்தன்

_