மனமெனும் மாயை!



இதயத்திற்குள் அம்பு துளைத்ததாய்
தூரிகையால் வரைந்து கொண்டே
மனது வலிக்கிறதென்றான்;
எது மனமென்றால்
நெஞ்சை தடவிக்கொடுத்து
அதைத்தான் இதயமென்றான்;
மூளை செய்வதையெல்லாம்
அறியாமலே அழுது புலம்பி
இடையில் காதலென்றான்;
இறுதியில் தோல்வியென்று
மரணத்தின் பாதையை தேடத்தொடங்க;

புதியதாய் ஏதோவொன்று
வாழ்வில் இதுவரை உணராததை
உள்வாங்க ஆயத்தமானபோது
இதயம் துளைக்கப்பட்டிருந்தது
ஓவியத்திலல்ல!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

1 கருத்து:

கருத்துரையிடுக