-01-
எதிர்பார்ப்புகள் நிறைவேறாத
நொடிகளுக்கு தான்,
எதிர்காலத்தின் மீதான ஏக்கங்கள் இருக்கும்.
உன்னுள் என்னை தேடித்தொலையும் நேரமெல்லாம்
நானும் ஓர் ஏலியனாய் உருமாறி
பிரபஞ்சம் கடந்து
எங்கெங்கோ பயணிக்க தொடங்குகிறேன்!
நீ எந்த கிரகத்து தேவதை?
-02-
வாழ்நாளெல்லாம்
உன் கூந்தலை என் தலையணையாக்கி
தூக்கம் தொலைத்த இரவுகளில்
உன் கூந்தலுக்குள்
என் மூச்சுக்காற்றை வைத்திருக்க ஆசை!
-03-
நீ என் தோளில் சாய்ந்து
உறக்கம் கொள்கிறாய்;
நானோ உன் கூந்தலுக்குள் முகம் பதித்து,
பெருங்கனவோடு உன்னுள் தொலைகிறேன்;
நீயே என்னை மீட்டுக்கொடு!
-04-
உதடுகள் உரசாததால்
உரையாடல் ஏதுமில்லை;
ஆனால் தோள்கள் இரண்டும் அருகருகே
உரசாமலேயே பல கதைகள் பேசிக்கொண்டிருக்கின்றன,
மெளனமாய் என்னருகில் அவள்!
-05-
கோபப்பட்டு குட்நைட் என்கிறாய்;
எதுவும் தெரியாததை போலவே
குட்நைட் சொல்லி,
உனக்காகவே ஆன்லைனிலேயே காத்திருக்கிறேன்.
மீண்டுமொரு குட்நைட்டுக்காக!
- இரா.ச.இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக