நீயும் நானும்!




















-01-

பார்வைகளாலேயே
என்னுயிர் நீ மீட்கிறாய்;
உன் கண்களுக்குள் தான்
விருட்சமாய் விரிந்திருக்கும்
என் ஆன்மாவின் விழுதுகள்
படர்ந்து கிடக்கின்றன போல!

-02-

தனிமையில் சிரிக்கிறேன்,
உன் நினைவுகளில் தவிக்கிறேன்.
என் எல்லா செயல்களிலும்
நீயே இருக்கிறாய்,
நானே தொலைகிறேன்.
மீட்காதே;
உன்னருகில் வைத்துகொள்!

-03-

உன்னோடு பேசும் 

ஒவ்வொரு நொடியிலும்,
தொலைந்த என்னை நீயே மீட்கிறாய்;
மீண்ட பின்பும்,
மீண்டும் மீண்டும் 

உன்னுள் தொலைகிறேன்; மீட்காதே!

-04-

அப்பறம் என்கிறாய்;
சொல்லு என்கிறேன்.
பதிலுக்கு, நீயே சொல் என்கிறாய்;
நானும் என்ன சொல்வதென தெரியாமல்,
ஏதேதோ சொல்லி முடிக்கிறேன்;
அப்பறம் என்னவென!

-05-

யாருமற்ற பயணத்தில்
நம் உதடுகள் நான்கும் மெளனித்திருக்கும் போது,
உன் இடுப்போடு என் கைகளும்,
என் தோளோடு உன் கைகளும்,
உடலோடு உரையாடி கொள்கின்றன!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக