சமூகவியல்!

 


01.
ஆங்கில பள்ளியை 

தேடி அலைந்தான் 
தன் மகள் தமிழ்செல்வி பாடம் கற்க!


02.

குடியிருக்க வீடில்லை
கூலித்தொழிலாளியாய்
கொத்தனார்!



03.

தீப்பெட்டி தொழிற்சாலையில்
சிறுவன் கண் கசக்க
மத்தாப்பூ சிரிக்கிறது!

04.


செதுக்கியவன் தொழிலாளி
திருடியவன் முதலாளி
சிலையாய் கடவுள்!



 - இரா.ச.இமலாதித்தன்

_

Post a Comment

1 கருத்து:

செல்வராஜ் ஜெகதீசன் சொன்னது…

ரசித்தேன் ச.இமலாதித்தன்.
மேலும் தொடருங்கள்.

கருத்துரையிடுக