காதலால்!


 

01.

உன் இமைகளின் 
கதவை திற
எனக்கான 

காதல் குடியேறலாம்!


02.

கொடுத்தும் வாங்கியும்
கடன்பட்டே நிற்கிறேன்
உன்னிடம் என் காதல்!

03.


கானல் நீராகியது

பிரிவின் கண்ணீர்
 

காட்சிப்பிழையாய்
உன் வருகை! 


04.


உன் இருவிழி பார்க்கும் போது
முற்றிலும் துறக்க முடிவு செய்த
இந்த முனிவனின் தவம்
கனவாகி போனது!
05.

ஆயிரக்கணக்கான ஆசைகளை
உனக்காக சேமிக்கிறேன்
ஒவ்வொரு கவிதைகளிலும்!

06.


நாட்காட்டியில் ஒவ்வொரு தேதி 

கிழிக்கும்போதும்  
உன்னை சந்தித்த நாளே 

வந்து மறைகிறது
உன்காதலைப் போலவே!

07.

என் முகம் பார்க்கையில்
உன் முத்தத்தின் சுவடுகளை
ஞாபப்படுதுகிறது கண்ணாடி!


-இரா.
ச.இமலாதித்தன்

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக