ஆன்மிகத்தொழில்!






தனக்கென புதுப்பெயரை தன்வசப்படுத்தி
பெயரின் முன்னும் பின்னும்
படித்து வாங்கிய பட்டம்போல - தனக்குதானே
அடைமொழியிட்டு அரசியல்வாதியாய்
ஆகிபோனான் ஆன்மிகவாதியென்று!
முகம் சிரம் முழுதும் முடியை வளர்த்து
தன்னைத்தானே முனிவனென்று
திரிந்திடும் கும்பல் அதிகமாகி போனப்பின்னே
ஆச்சாரமாய் ஆசிரமம் தொடங்கி
விபச்சாரம் நடத்தினான் விபூதி திலகமிட்டு!
சொற்பொழிவை உலகெங்கும் நடத்தி
செல்வ செழிப்பாய் வாழ்க்கை நகர்த்தி
காவி உடையை களங்கப்படுத்தும்
காம இச்சை தீராதவனெல்லாம்
தீர்க்கத்தர்சியனான் பக்தனால்!


தானே இறைவனென்று சுயபுகழ் தேடி
அருளைக்கொடுத்து பிரம்மனானவன்
பின்னொருநாள் சங்கடப்படப்போவது தெரியாமலேயே
படுக்கையை பகிர்ந்தான் நடிகைகளோடு
பிரம்மச்சாரியென்ற பகல்வேசமிட்டு!
கடவுள் பெயரால் செல்வம் சேர்க்கும்
கயவர்க்கூட்டம் நிரம்பிவழியும் நெரிசலிடையே
கண்டவனெல்லாம் கடவுளைக் கண்டேனென்று
தம்பட்டம் அடித்து பணம்கொழிக்கின்ற
வியாபார மையமானது ஆன்மிகத்தொழில்!

- இரா.ச.இமலாதித்தன்



Post a Comment

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஆபாச சாமிகள் பற்றி நல்ல கவிதை. வாழ்த்துக்கள்

aanmigakkadal சொன்னது…

disqualifed person of hindu religion
by
www.omshivashivaom.blogspot.com

கருத்துரையிடுக