01.
உன்னை காணாத
ஒவ்வொரு வினாடியும்
வீணாய் போகிறதே யென்று
வருத்தத்துடன்
உரையாடிக்கொண்டிருக்கிறது
கடிகார முட்கள்!
----o0o----
02.
காதல் தவறில்லை
என்றுரைத்த
என் நண்பனிடம்
கோபப்பட்டத்தை
தவறென்று உணர்கிறேன்
இன்று
உன்னை கண்டபின்னால்!
----o0o----
03.
காதல் மறுப்பை
பெருமிதமாய் பேசித்திரியும்
பெரியோர்கள் அறிவார்களா
பிறப்பின் அடித்தளமே
காதலென்று...!
----o0o----
04.
நான் பேருந்து படியினில்
தொற்றிக்கொண்டு
பயணம் செய்து வரும்
காலைநேர சாலையெங்கும்
உன் மீதான காதலும்
என்னோடு தொற்றிக்கொண்டு
பயணிக்கிறது
பேருந்தை விட்டு
நீ கீழறங்கி
சென்ற பின்பும்!
----o0o----
05.
காதல் இல்லையென்று
சுற்றித்திரிந்த
நாட்களையெல்லாம்
காட்சிப் பொருளாய்
நெஞ்சுக்குள் தேக்கி வைத்திருக்கிறேன்
உன்னிடம் காண்பிப்பதற்காய்!
----o0o----
- இரா.ச.இமலாதித்தன்
இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.
_
2 கருத்துகள்:
super love kavithai. vazththukkal
நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...தொடருங்கள்...
கருத்துரையிடுக