மெல்லத் தொலைகிறேன்!


















-01-

நமக்கென ஓர் உலகை
இப்பிரபஞ்சத்தில் உருவாக்கி கொள்ள
இறைவன் எனக்கொரு வரமொன்றை தந்துவிட்டால்,
அவ்வுலகையே
அன்பால் ஆட்சி செய்யும் பேரரசி நீ தான்!


-02-

தொலைவில் இதழ்கள் புன்னகைப்பதும்,
அருகில் விழிகள் புன்னகைப்பதும்,
இதுபோலவே கடக்கிறது
நம் பலமணிநேர உரையாடல்,
ஓரிரு காதல்மொழி வார்த்தைகளால்!

-03-

வறண்ட நிலத்தில் மண்வாசம் வீசும்
கடும் வெயில் கால மழை போலவே,
உன் பார்வையால்
சில்லென தென்றலை தான் வீசி போகிறாய்,
புயலடித்து கிடக்கிறது மனது!

-04-

உன் கண்ணிசைவுக்காக
காத்திருக்கும் என்னுயிரும்,
நீ உதிர்க்கும் புன்னகையால்
பிரபஞ்சத்தில் பெருவெடிப்பை உருவாக்கி
நமக்கான புதுபூமியை படைக்கிறது!

-05-

உன் காதோரம் எச்சில் சிதற
முத்தமிட்டு கதை பேசிக்கொண்டிருக்கிறேன்;
நீ சிணுங்கும் அந்த நொடிகளில்
காதோரமடல்களை கடித்து
உன்னை திண்ண முயல்கிறேன்;
நீயோ என்னை கொல்கிறாய்!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக