-01-
நமக்கென ஓர் உலகை
இப்பிரபஞ்சத்தில் உருவாக்கி கொள்ள
இறைவன் எனக்கொரு வரமொன்றை தந்துவிட்டால்,
அவ்வுலகையே
அன்பால் ஆட்சி செய்யும் பேரரசி நீ தான்!
-02-
தொலைவில் இதழ்கள் புன்னகைப்பதும்,
அருகில் விழிகள் புன்னகைப்பதும்,
இதுபோலவே கடக்கிறது
நம் பலமணிநேர உரையாடல்,
ஓரிரு காதல்மொழி வார்த்தைகளால்!
-03-
வறண்ட நிலத்தில் மண்வாசம் வீசும்
கடும் வெயில் கால மழை போலவே,
உன் பார்வையால்
சில்லென தென்றலை தான் வீசி போகிறாய்,
புயலடித்து கிடக்கிறது மனது!
-04-
உன் கண்ணிசைவுக்காக
காத்திருக்கும் என்னுயிரும்,
நீ உதிர்க்கும் புன்னகையால்
பிரபஞ்சத்தில் பெருவெடிப்பை உருவாக்கி
நமக்கான புதுபூமியை படைக்கிறது!
-05-
உன் காதோரம் எச்சில் சிதற
முத்தமிட்டு கதை பேசிக்கொண்டிருக்கிறேன்;
நீ சிணுங்கும் அந்த நொடிகளில்
காதோரமடல்களை கடித்து
உன்னை திண்ண முயல்கிறேன்;
நீயோ என்னை கொல்கிறாய்!
- இரா.ச.இமலாதித்தன்
தொலைவில் இதழ்கள் புன்னகைப்பதும்,
அருகில் விழிகள் புன்னகைப்பதும்,
இதுபோலவே கடக்கிறது
நம் பலமணிநேர உரையாடல்,
ஓரிரு காதல்மொழி வார்த்தைகளால்!
-03-
வறண்ட நிலத்தில் மண்வாசம் வீசும்
கடும் வெயில் கால மழை போலவே,
உன் பார்வையால்
சில்லென தென்றலை தான் வீசி போகிறாய்,
புயலடித்து கிடக்கிறது மனது!
-04-
உன் கண்ணிசைவுக்காக
காத்திருக்கும் என்னுயிரும்,
நீ உதிர்க்கும் புன்னகையால்
பிரபஞ்சத்தில் பெருவெடிப்பை உருவாக்கி
நமக்கான புதுபூமியை படைக்கிறது!
-05-
உன் காதோரம் எச்சில் சிதற
முத்தமிட்டு கதை பேசிக்கொண்டிருக்கிறேன்;
நீ சிணுங்கும் அந்த நொடிகளில்
காதோரமடல்களை கடித்து
உன்னை திண்ண முயல்கிறேன்;
நீயோ என்னை கொல்கிறாய்!
- இரா.ச.இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக