பிரிவின் வலி!


















001.

எனக்கான வருடத்தில்
365 நாட்கள் வருவதேயில்லை;
உன்னை காணாத நாட்களெல்லாம்
நாட்காட்டியிலிருந்து
கிழிக்கப்படாமலேயே
வெறுமையாய் கடந்து செல்வதால்!

002.

வெறும் ஐம்பது மைல் தொலைவு கூட
இந்த ஒரு நாளில்
அண்டார்டிகா கண்டத்திலுள்ள
தூரம் போல உணர வைக்கிறது
என்னருகில் நீ இங்கில்லை!


 003.


நேற்றை கடந்து விட்டு வந்த
இன்றும் கூட
நாளை கடந்து விடும்;
நேற்றால் இன்றை இழக்கிறேன்,
நாளை என்ன வைத்திருக்கிறாய்?
நான் இழப்பதற்கு!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

1 கருத்து:

Unknown சொன்னது…

கவிதை அருமை

கருத்துரையிடுக