காதலும் கடவுளும்!




















001.

தாமரை நீ
அதன் இலை நான்
தண்ணீர் போல நம் நட்பு
விலகுதல் எளிது தான்
ஆனாலும் முடியவில்லை
இறையாய்
மனதினுள் நீ!


002.


நான் என்பதையே
கொஞ்சம் கொஞ்சமாய்
உன்னால் இழக்கிறேன்
நீ மட்டுமே
என்னுள் இருக்கிறாய்
இப்போது
நீ கடவுளா? காதலா?
குழம்பி நிற்கிறேன்!


003.


ஞானியின் நிலை
எதுவென தெரியாது
ஆனால் நான்
புற வாழ்வியல் எல்லையை
கடந்து விட்டதாய் உணர்கிறேன்
இறைவனிடம் எதை கேட்பதென்றே
தெரியவில்லை
என்னையே கேட்டுவிடவா?


- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக