அலைபேசி!





















அலைபேசியில் சேமிக்கப்படாத
புத்தம்புதிய எண்ணிலிருந்து
அழைப்பு வரும்போதெல்லாம்
அது அவளாக இருக்குமோயென்ற
ஆர்வம் மட்டுமே
ஒவ்வொரு முறையும்
விடாமல் தொற்றிக்கொள்கிறது;
மிச்சமிருப்பது என்னவோ
வழக்கம்போல
ஏமாற்றமும் ஏக்கமும் தான்!

 - இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிரமம் தான்... ஆனால் சொன்னது உண்மை...

விஸ்வநாத் சொன்னது…

கவிதை கனம் நிறைந்திருக்கு;அற்புதம்;

Unknown சொன்னது…

வயது அப்படி!

கருத்துரையிடுக