இலக்கியவாதி!



இணையங்கள் போர் தொடுத்ததால்
இலக்கியங்கள் தோற்கடிக்கப்பட்டன
தினமொரு எழுத்தாளன்
புத்தம்புதியதாய் உருவெடுத்தான்;
எனக்கென்ன என்பதுபோல்
விளக்கங்கள் கொடுத்து கொண்டிருந்தான்;
புளங்காகிதம் அடைந்தவனாய்
அனைத்தையும் விவரித்து கொண்டிருந்தான்;
புரியாத விசயங்களையெல்லாம்
தீர ஆய்வறிந்து கிறுக்கலானான்;
நவீனத்து இலக்கிய உலகம்
இவனாலாயே புனரமைக்கப்பட்டது;
இனி இவன் எழுதுவதுதான்
இலக்கியமென நிர்ணயிக்கப்பட்டது!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

கவிதையா ! உரை நடையா! ஒரு தயக்கம்! இருந்தாலும் நயம் இருக்கிறது!

கருத்துரையிடுக