உளறிய வார்த்தைகள்!



பலரும் என்னருகில் இருக்கையில்
தனிமைப்படுத்த பட்டிருந்தேன்;
பெரும் சீற்றம் எனக்குள்
கோபத்தீயை கக்கிக்கொண்டிருக்கிறது;
பெரியதோர் பாரம்
தலையினுள் திணிக்கப்படுகிறது;
இது வெறும் மாயையல்ல
உண்மையாகத்தான் இருக்கவேண்டும்
சரியாக உணரமுடியவில்லை;
யாரோசிலர் உரையாட முற்படுகிறார்கள்
நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்;
புரியாததை போலிருக்கிறது
புரிந்து கொள்ள முயலவில்லை;
பதில் சொல்லவும் எத்தனிக்கிறேன்
தோல்விதான் மீதாமாக இருக்கிறது;
பலமுறை தோல்வியடைந்து இருக்கிறேன்
ஆனாலும்
வெற்றியாளனாகக் காண்பிக்க
அதைவிட அதிகமாகவே சிரமப்படுகிறேன்;
ஒருவேளை
வெற்றியாளனாகிவிட்டாலும் சிரமப்படலாம்;
கொஞ்சம் குழப்பமாகவே இருக்கிறது
எதையும் எழுதும் மனநிலையில் நானில்லை;
உளறிய வார்த்தைகளை அலங்கரித்து
ஒருவேளை இவையெல்லாம்
கவிதையாக்கப் பட்டிருக்கலாம்
அதற்கு நான் பொறுப்பல்ல!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல உளறல்... கோபம் கண்ணை மறைத்து விடும்...

கருத்துரையிடுக