காதல் தேவதை!



-001-

பறவைக்கு மட்டும்தான்
சிறகுகள் உண்டா என்றாள்;
தேவதைக்கும் உண்டு
உன்னைபோன்ற சிலர்
விதிவிலக்கென்றேன்;
கேட்காமலேயே கிடைத்தது!

-002-

மின்மடலின் கடவுச்சொல்
என்னவென்றாள்;
தேவதை என்றேன்...
என்னென்னமோ
யோசித்துக்கொண்டிருந்தாள்
அவளது பெயரை மறந்துவிட்டு!
 

-003-

காதல் என்னவென்றாள்
என்னை நீ
புரிந்துகொள்ளென்றேன்
இன்னும் கிடைக்கவில்லை
அவளுக்கான பதில்!

-004-

நமக்குள் நட்பு
எப்படி உருவானதென்றாள்
சிரித்தேன்;
மறந்துவிட்டதாய் சொல்லி
நினைவுப் படுத்தினாள்;
மறுமுறையும் சிரித்தேன்
மீண்டுமொருநாள் நினைவுபடுத்த
புதுக்காதல் இருப்பதால்!

- இரா.ச.இமலாதித்தன்


Post a Comment

5 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ரசனைக்குறிய கவிதைகள்...
அழகு...

இரா.ச.இமலாதித்தன் சொன்னது…

நன்றி :))

saravananfilm சொன்னது…

உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.


hot tamil actress gallery

பத்மா சொன்னது…

nandru

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.

கருத்துரையிடுக