கனவுக்குள் மழை!




மண்ணை பழித்துக் கொண்டிருந்தது
மேகக்குழுமம்...
விண்ணை சூழ்ந்த வெள்ளை மின்னலால்
கிழித்தெறியப்படுகிறது வானம்;
ஆழ்ந்த இருளின் உயிர்முடிச்சும்
சற்றுநேரம் அவிழ்க்கப்படுகின்றது;
மீண்டுமிந்த இருள்சூழல்
தன் ஆளுமையை செலுத்திவிட
நீண்டுக்கொண்டிருக்கிறது;
வறண்ட வெளியினுள்
சின்னப்புன்னகையாய்
விழுந்த வெளிச்சம்
இன்னுமிங்கே சுகமாய்
நீந்திக்கொண்டிருக்க
கமழும் வாசனையை தவழவிட்டு
மருத மண்ணும்
தாலாட்டு பாடிக்கொண்டிருக்கிறது;
கோடைக்கால மழைப்போல
சிறு தூறலில் தொடங்கி
உச்சத்தையும் தொட்டுவிடும் நேரம்
மூடப்பட்ட கண்களின் வழியே
கனவுக்குள்ளிருந்து மீளப்பட்டு
நிகழ்வுகளும் களையப்படுகிறது!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் வல்லமை இதழிலும் பிரசுரமாகியுள்ளது.

Post a Comment

1 கருத்து:

arasan சொன்னது…

வரிகளின் வலிமை மிகப்பெரியது ...

கருத்துரையிடுக