பைரவ பயம்!



அதி காலை நேரம்
சிவன் கோயிலுக்குள்
கல்லாய் காட்சி தந்ததை
கரம்கூப்பி வணங்கியபோது
பக்தியால் பெருக்கெடுத்தவொன்றும்...
அந்தி மாலை நேரம்
சிவன்கோயில் தெருவோரம்
கல்லெடுத்து விரட்டும்போது
பயத்தினால் உருவெடுத்தவொன்றும்...
ஒன்றோடொன்றாய் மற்றொன்றோடு
என் மனதுக்குள் ஒருங்கிணைந்து
உள்ளேயும் வெளியேயும்
முரண்பாடாய் நின்றிருந்தது
நாயும் பைரவனுமாய்!

- இரா.ச.இமலாதித்தன்


Post a Comment

2 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பக்தியும் வீரமும்
பயமும் பைரவருமாய்
அழகிய கவிதைப்
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நனறு...

கருத்துரையிடுக