நிழலும் நீயே!




ஆளரவமற்ற மதியநேர பயணத்தின்
அரங்கேறிய ஆகாய மார்க்க
ஆதித்த தாண்டவத்தில்
அல்லல் பட்டுக்கொண்டே
அவசரகதியில் கால்களிரண்டும்
நகர்ந்து கொண்டிருக்க;
நீண்ட நெடுந்தொலைவில்
என் தாயைப்போல் ஒருத்தி
என்னை இளைப்பாற்றி அரவணைக்க
அழைப்பு விடுக்கிறாள்
ஒற்றைக்காலோடு
நிழல் தரும் மரமாய்!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

4 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நன்றாக இருக்கிறது..

நண்பரே...

பனித்துளி சங்கர் சொன்னது…

தாயுடன் மரத்தை ஒப்பிட்டு இருப்பது மிகவும் அருமை நண்பரே

இரா.ச.இமலாதித்தன் சொன்னது…

@ கவிதை வீதி # சௌந்தர்

நன்றி...!

இரா.ச.இமலாதித்தன் சொன்னது…

@பனித்துளி சங்கர்

நன்றி ...!

கருத்துரையிடுக