சதுரங்கம்!



எட்டு எட்டாய் தொட்டு நிற்கும்
ஒவ்வொரு கட்டமெங்கும்
மீண்டுமொரு பொற்காலம்
அழிவுறும் காலமன்றோ...
போர்க்களம் தினம் சென்றும்
பக்கத்தில் பரி இரண்டு இருந்தும்
பறிதவிக்க விட்டதென்ன...
கடை இருபுறம் கரியிரண்டு இருந்தும்
கண்கலங்க வைத்ததென்ன...
நாலிரு படையினர் இருந்தென்ன
ராணியின்றி தோற்று நிற்கிறேன்
கூனிக்குறுகி தனித்து நிற்கிறேன்
இத்தனை நடந்த பின்னும்
நானின்று வெட்டப்படுகிறேன்
யாருமில்லா ராஜ்யத்தின்
அரசனென்ற அவப்பெயரால்!

 - இரா.ச.இமலாதித்தன் 

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக