நீ நான் காதல்!




-001-

விடிகாலை பொழுதுகளில்

சாலையோரம் 
நீ பயணிக்கும் நேரமெல்லாம்
சூரியனும் விரைவாகவே
எழுந்து விடுகிறது
உன்னை தரிசிப்பதற்காக!

-002-

மாலை பொழுதில்

உன்புன்னைகைக் கண்டு 
நிலவுகூட சற்றுதடுமாறுகிறது
எனக்கு போட்டியாக
இவள் யாரென்று!

-003-

சூரிய உதயத்தை

உன் முகத்திலேயே
கண்டுவிடுகிறேன்
இரு புருவ மத்தியில்
பொட்டாக...!

-004-

நீ சிரிக்கின்றபோதெல்லாம்
நினைத்துகொள்வேன்
என்னைப்போல இன்னும் 
எத்தனை பேரை பைத்தியமாக்க
முயற்சித்தாயென்று...!

-005-

உன்னால் மட்டும்

எப்படி சாத்தியமாகிறது
ஆயுதமே இல்லாமல்
கண்களுக்குள் ஊடுருவி
கனத்த என் நெஞ்சை
கவர்ந்திழுக்க!

-006-

உன் இருவிழி
தரிசனம் கிடைக்காத நாட்களில்
பட்டினியாகவேகிடக்கிறது
என் நெஞ்சம்...!

-007-

நீ கோபப்படும் நேரங்களில்
என்னை பார்த்து சிரிக்கிறது

நீ புன்னகைக்கும் நேரங்களில்
என்னை பார்த்து சண்டையிடுகிறது
உன் விழிகளுக்கும் இதழ்களுக்கும்
என்னவொரு முரண்பாடு!

- இரா.ச.இமலாதித்தன் 




Post a Comment

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மனதை நெகிழ்விக்கும் பதிவு ...அருமை...

கர்ப்பிணிப் பெண்ணின் நினைவு பற்றிய ஒரு கவிதையை பதிப்பித்துள்ளேன்.. கண்டு சொல்லுங்கள் உங்களது கருத்தை...http://semmozhi.wordpress.com

இது ஒரு புதிய பதிப்பு ...அதனால் தயவுகூர்ந்து உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும்

கருத்துரையிடுக