அவளுள் தொலையும் காதல்!





-01-

என் கவலைகளுக்கெல்லாம்
நீயே ஓர் ஆறுதல்;
சோகத்திலும் கோபத்திலும்
நான் தொலையும் போதெல்லாம்
உன் வார்த்தைகளால் என்னை மீட்கிறாய்.
நீதான் என் தேவதை!

-02-

கடவுளிடம் என் வேண்டுதலெல்லாம்
உனக்காகவே இருக்கிறது.
நீ என்னை பெற்றவளும் இல்லை;
நான் உன்னை பெற்றவனும் இல்லை.
நாம் நமக்குள்ளேயே காதலை பெற்றவர்கள்!

-03-

ஐயிரு விரல்களின் தீண்டல்களோடு,
உன்னிரு விழிகளின் சீண்டல்களுமாக,
நீ என்னருகில் இருக்கும்போது
கொஞ்சகொஞ்சமாய் தொலைத்த என்னை
நீயே மீட்டுக்கொடு!

-04-

சிரிப்பதும் சிந்திப்பதுமாக
உன் நினைவுகளோடே கடக்கும்
இந்த தனிமைகளெல்லாம்,
உனக்காகவே இப்படி மாறி போனதாக
வெகு எளிதாக புரிந்து கொள்கிறது உயிரே!

-05-

என்னவளிடம்
நெடுநேரம் பேசி முடிக்கையில்
முத்தம் ஒன்றை
கண்களால் தந்துவிட்டு செல்கிறாள்;
வரம் கொடுக்கும் தேவதை யாரென தெரியாது;
என் தேவதை இவள்!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக