தேவதையாய் நீ!





















-01-

ஐந்தாம் மறையாகிபோன காதலுக்குள்,
உண்மைகள் ஊமையாகி
பொய்கள் சூழ் உரையாடல்களே
நிறைவானதாக உணரப்படுகிறது;
காதலும், காதலிப்பவர்களும் வேறு வேறுதான்!

-02-

நீ உதிர்க்கும் புன்னகைக்கும்
இதழ் வழியே
காதல்பூக்கள் கோடி மலரும்;
அந்த நொடியினிலே
உன்னிரு கண்களுக்குள்
என்னை இழுத்து,
இமைகளால் கட்டி போடும்;
நீ மாயம் செய்யும் தேவதை!

-03-

உன் கை கோர்த்து நடக்கிறேன்,
வானெங்கும் வானவில்;
மனதுக்குள் புதுச்சாரல்மழையாய்
நீ உதிர்க்கும் புன்னைகை;
குடைகள் போல கண்கள் ஏந்த,
நீ என் தேவதையாகி சிரிக்கிறாய்!

-04-

மெல்லிய குரல்களால்
என்னை என்னவெல்லாம் செய்கிறாய்;
சின்ன புன்னகையால்
வீணை போலவே மீட்டுகிறாய்;
உன்னுள் தொலைந்த
என்னை மீட்காமலே அடைக்கலம் கொடு!

-05-

உன்னோடு வாழப்போகும்
பொற்காலத்திற்காகவே,
ஒவ்வொரு நாளையும்
நொடி போல கடத்தி கொண்டிருக்கிறேன்;
சொர்க்கத்தின் வாசற்படிக்கு அருகில்
தேவதையாய் நீ!

-இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக