யாரோவொன்றின் வாழ்த்துகள்!





மனிதனாய் வாழ்வது கடினமாய் இருக்கிறது
இறைவனாகவே ஆகிவிடவாயென்று
ஆகாய ஆதித்தனிடம்
ஏதோதோ கோரிக்கைகளோடு
மனங்களெல்லாம் வழிபட்டுக்கொண்டிருந்தது.
உழைப்பை பயிற்றுவித்து
உணவளித்த இறைவனுக்கு கைமாறாய்
தையில் கொண்டாடப்படும்  வழிபாட்டு திருவிழாவில்;
நிலவில் குடிபுகுந்தாலும் நிலமும் உழவுமில்லாத
உணவு உனக்கில்லையென்று மனதோடு மறுமொழிந்து
முதலில் நீ உயிராய் இருக்க 

முயற்சிக்க வாழ்த்துகளை சொல்லிவிட்டு சென்றது
கடவுளும் மனிதனுமில்லா ஏதோவொன்று!

- இரா.ச.இமலாதித்தன்

இந்த கிறுக்கல்கள் வல்லமை மின்னிதழிலும் வெளிவந்துள்ளது.

Post a Comment

1 கருத்து:

Rathnavel Natarajan சொன்னது…

வாழ்த்துகள்.

கருத்துரையிடுக