அரசியல் வியாதி!



பொது கழிவறை சுவற்றில்
கிறுக்கிய வார்த்தைகளால்
ஒவ்வொரு இரவுகளிலும்
போதையில் யாராரையோ
தூற்றிக்கொண்டிருந்தான்;
யோக்கியனென அடையாளப்படுத்த
மிகவும் மெனக்கெட்டு
தேர்ந்தெடுத்து கொண்டிருந்தான்
தன்னுடைகளோடு தலைவனையும்;
அரசியல் சாக்கடையில்
வெண்ணிற சட்டையோடு
கட்சிக்கரை வேட்டியோடும்
தூர்வார இறங்கிவந்தான்
தன்மீது கறைபடியாமல்;
திராவிடன் என்ற போர்வையில்
தலைமையின் ஊழலை
தானும் கற்றுக்கொண்டு
உடன்பிறப்பாக்கி கொண்டான்
அரசியலை முழுநேர தொழிலாக!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் நண்பரே...

முத்தரசு சொன்னது…

சரியாக சொன்னிர்கள்

கருத்துரையிடுக