நீயில்லாத போது!



வானோடு நீலமும், 

காடோடு பசுமையும்
நிலத்தோடு மஞ்சளும், 

நிலவோடு வெண்மையும்
இரவோடு கருமையும், 

தீயோடு சிகப்புமாய்
ஏழு வண்ணங்களோடு
எல்லா திசைகளும் 

பல வண்ணங்களாய் சிதறிக்கிடக்கும் 
இவ்வேளையில் கூட
நிறங்கள் அனைத்தும்
வண்ணங்களற்று 

வெறிச்சோடி கிடக்கிறது
என்னருகில் நீயில்லாத போது!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக