மழைக்காலங்களில்!


-001-


மழைக்காலங்களில்
உன்னை தொடாமல்
மண்ணை தொடும் மழைத்துளிகள்
கண்ணீரோடே வழிந்தோடுகிறது
சாலையோர  பாதைகளில்!

-002-

மழைக்காலங்களில்

உன்னை தொட்டுவிட்டு
மண்ணை தொடும் 
மழைதுளிகள்தான் 
மோட்சமடைகிறதாம்
குடையை கொஞ்சம்
தூர வைத்துவிட்டு
தூரலில் உன் முகத்தை காட்டி
எனக்கு செய்த பாவம் போக்க
இதுபோல் புண்ணியங்கள் சில
செய்து விடு!

-003-

மழைக்காலங்களில்
உன்மேல் விழுந்த
ஒருசில மழைத்துளிகளும்
பிரிய மனமில்லாமல்
உன்னை இறுகப்பற்றி கொள்கின்றன
என்னைபோலவே!

-004-

மழைக்காலங்களில்
நீ குடை பிடித்து
மழையில் நடக்கும்போதெல்லாம்
உன்னுள் கூடல் கொள்ள முடியாத
மழைதுளிகளெல்லாம்
கோபித்து கொண்டு சண்டையிடுகிறது
உன் குடையோடு!


- இரா.ச.இமலாதித்தன்


 இந்த கிறுக்கல்கள்  யூத்புல் விகடன்  இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

இந்த கிறுக்கல்கள்  தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக