காதல் முதல்!




-001-


அலைகள் கூட
என்னிடம் கேட்குதடி...
உன்னவள் எங்கென்று ?
எப்படி சொல்ல
நீ இன்னொருவனுக்கு
மனைவியானதை...!   


-002-
 
என்னைபோல் அலைகளும்
உன் பெயரை  உச்சரித்துக்கொண்டே
நீ நின்ற இடத்தைத் 

தொட்டுவிட்டு செல்கிறதே
ஏன்?
என்னிடம் சொன்னதுபோல்
அலைகளிடமும் சொல்லிவிட்டாயா
காதலிக்கிறேனென்று! 


-003-
 
அன்பே நீயும்
பங்குசந்தை போலத்தான்
நேற்று
சந்தோசப்பட வைத்தாய்
இன்று
சங்கடப்பட வைக்கிறாய்!


-004-

நாம் இருவரும்
கைகோர்க்காமல்
கடற்கரையில்
கடந்துசெல்லும்
தருணங்களில்
அலைகள் கூட
உள்வாங்கி கொள்கிறது!


- இரா.ச.இமலாதித்தன்


Post a Comment

1 கருத்து:

சா.கி.நடராஜன். சொன்னது…

poems are good

i would like to chat with you regarding share market

கருத்துரையிடுக