மெல்லிய புன்னகையில்!





-01-

உன் மூச்சுக்காற்று கலந்த அரவணைப்பில்
எனக்கான ஓர் உலகம் சுழலத்தொடங்கி
உன்னுள் அடங்கும்;
இனி நமக்கான இந்த பிரபஞ்சமே
சிறுதுளியாய் மாறிப்போகும்!

-02-

வாழ்நாளெல்லாம்
உன் கூந்தலை என் தலையணையாக்கி
தூக்கம் தொலைத்த இரவுகளில்
உன் கூந்தலுக்குள்
என் மூச்சுக்காற்றை வைத்திருக்க ஆசை!

-03-

உதடுகள் உரசாததால்
உரையாடல் ஏதுமில்லை;
ஆனால் தோள்கள் இரண்டும் 
அருகருகே உரசாமலேயே 
பல கதைகள் பேசிக்கொண்டிருக்கின்றன,
மெளனமாய் என்னருகில் அவள்!

-04-

உன் கண்ணிசைவுகளுக்காக காத்திருக்கும்
என் உயிர் மொத்தமும்,
நீ உதிர்க்கும் மெல்லிய புன்னகையால்
ஆயிரம் ஒளியாண்டை
ஒருநொடியில் கடந்து விடுகிறது!

-05-

தனித்தனியான நான் என்பதே
நம்முள் இருப்பதாய்
எனக்கு இதுவரை நினைவிலில்லை;
என்னைவிட உன்னையே
நானாக நினைத்திருக்கிறேன்.
நீ வேறு யாரோயல்ல;
நான் தான்!

- இரா.ச.இமலாதித்தன்

என் பிரபஞ்சமாகிறாய்!
























-01-

தினமும் எத்தனை பெண்களை கடந்தாலும்
நினைவுகளில் நிற்பதில்லை;
பாவம், அவர்களுக்கும் கொஞ்சம் இடம் கொடு;
என்னுள் நீ மட்டுமே ஆக்கிரமித்து விட்டாய்!

-02-

நீ என்னோடு இல்லாத போது
சிலுவையில் அறையப்படுகிறேன்.
நீ அருகில் இருக்கையில் உயிர்த்தெழுகிறேன்.
நான் கடவுளல்ல;
ஆனால் நீயே எல்லாமுமாகிவிட்டாய்!

-03-

என் மடி மீது சாய்ந்து
மெளன புன்னைகையில்
பல கதைகள் பேசி என்னை பார்க்கிறாய்;
நான்கு யுகத்தை நொடியில் கடந்து
உன்னுள் தொலைகிறேன்
நீயே என் பிரபஞ்சமாகிறாய்!

-04-

உன்னாலேயே குழம்பி நிற்கிறேன்;
நீயே தெளிவுற செய்கிறாய்.
என்னுளேயே கடந்து தவிக்கிறேன்;
நீயே மீட்கிறாய்;
இது உளியின் வலி தாங்கும்
சிலையின் வேதனை!

-05-

என் தோள் சாய்ந்து நீ உறங்கும்போது,
உன் நெடுந்கூந்தலுக்குள் முகம் பதித்து
நான் தொலைந்து போகிறேன்.
மீட்காதே;
உன்னுள்ளேயே தொலைந்து விடுகிறேன்!

- இரா.ச.இமலாதித்தன்

அவளோடு அருகில்!




-01-

உன்னருகிலேயே வாழ்நாளெல்லாம்
இருந்து விட்டால் போதும்;
சொர்க்கம் என்ற ஒன்றே பொய்யாகி போகும்.
நீயும் நானும்
இங்கேயே புதுக்கடவுளாகி போவோம், வா!

-02-

நீ எது சொன்னாலும் அது பெருங்கவிதை;
உன் உதடுகள் வழியே
உதிரும் வார்த்தைகள், புது இலக்கியம்;
நீ என் தாய்க்கு மட்டுமமல்ல;
தமிழன்னைக்கே மருமகள்!

-03-

ஒவ்வொரு நாளும் என் உடலுக்கும்
உயிருக்குமான உறவை,
உன்னால் தானே உயிர்பித்து கொள்கிறது மனது;
என் அனுமதி இல்லாமலேயே
எப்போது நீ என்னுயிரானாய்?!

-04-

வாழ்நாளெல்லாம்
உன் கூந்தலை என் தலையணையாக்கி
தூக்கம் தொலைத்த இரவுகளில்
உன் கூந்தலுக்குள்
என் மூச்சுக்காற்றை வைத்திருக்க ஆசை!

-05-

உதடுகள் உரசாததால்
உரையாடல் ஏதுமில்லை;
ஆனால் தோள்கள் இரண்டும் அருகருகே
உரசாமலேயே பல கதைகள் பேசிக்கொண்டிருக்கின்றன,
மெளனமாய் என்னருகில் அவள்!

- இரா.ச.இமலாதித்தன்

காதல் சூழ் உலகு!



















-01-

என் மனமெனும் இந்த பிரபஞ்சத்திற்குள்
வெடித்து சிதறும் பெரும்பிரளயத்தால்
உருவாகும் புத்தம்புது கிரகத்திலெல்லாம்
நீயே காதல்சூழ ஆட்சி செய்கிறாய்!

-02-

நீ அருகில் இருக்கும்
சின்னஞ்சிறு நொடிகளெல்லாம்
பல மணி நேரமாக நீண்டுவிடாதாயென
ஏங்கி கிடக்கும் இந்த கடிகார முட்களின்
தவத்தை கலைத்துவிடாமல்
இன்னும் கொஞ்சம் நேரம் என்னோடு இரு!

-03-

கடந்த காலமெல்லாம்
காலாவதியான நாட்காட்டியில்,
உன் நினைவுகள் மட்டுமே
கிழிக்கப்படாமலே கிடக்கிறது;
வருங்காலமெல்லாம் நீயாகி போனாய்
என் வருங்காலமே!

- 04-

நேற்றை தொலைத்த இன்று போலவே,
நான் என்பதும்
உன்னுள் தொலைந்து கொண்டிருக்கிறது;
நீ இருக்கிறாய்
உன்னுள் நானும் இருக்கிறேன்;
தொலைந்த என்னை மீட்காதே!

-05-

என் இதயத்தை
உன் இதழ்வழி வார்த்தைகளால்
கிழித்தெறிந்தாய்;
உன் புறக்கணிப்புக்கான
என் சோகங்களையெல்லாம்
என்னுள்ளேயே
சேகரித்து வைத்திருக்கிறேன்;
நாளை உனக்கான நிழலை
இதய கூரையில் தருவேன்;
என் இறுதி நாளுக்கான ஓலையை
இன்றே குறித்துக்கொள்;
நான் உன்னால் இறக்க நேரிட்டாலும்,
உன்னுள் வாழ்வதற்காகவே
பிரத்தனை செய்வேன்
என்னுடலை உடைத்து!

- இரா.ச.இமலாதித்தன்

அவளுள் தொலையும் காதல்!





-01-

என் கவலைகளுக்கெல்லாம்
நீயே ஓர் ஆறுதல்;
சோகத்திலும் கோபத்திலும்
நான் தொலையும் போதெல்லாம்
உன் வார்த்தைகளால் என்னை மீட்கிறாய்.
நீதான் என் தேவதை!

-02-

கடவுளிடம் என் வேண்டுதலெல்லாம்
உனக்காகவே இருக்கிறது.
நீ என்னை பெற்றவளும் இல்லை;
நான் உன்னை பெற்றவனும் இல்லை.
நாம் நமக்குள்ளேயே காதலை பெற்றவர்கள்!

-03-

ஐயிரு விரல்களின் தீண்டல்களோடு,
உன்னிரு விழிகளின் சீண்டல்களுமாக,
நீ என்னருகில் இருக்கும்போது
கொஞ்சகொஞ்சமாய் தொலைத்த என்னை
நீயே மீட்டுக்கொடு!

-04-

சிரிப்பதும் சிந்திப்பதுமாக
உன் நினைவுகளோடே கடக்கும்
இந்த தனிமைகளெல்லாம்,
உனக்காகவே இப்படி மாறி போனதாக
வெகு எளிதாக புரிந்து கொள்கிறது உயிரே!

-05-

என்னவளிடம்
நெடுநேரம் பேசி முடிக்கையில்
முத்தம் ஒன்றை
கண்களால் தந்துவிட்டு செல்கிறாள்;
வரம் கொடுக்கும் தேவதை யாரென தெரியாது;
என் தேவதை இவள்!

- இரா.ச.இமலாதித்தன்

நீயே நானாகினேன்!
















-01-

அருகிலிருந்தும் பேச முடியாத சந்தர்ப்பங்களில்,
கண்கள் உன்னைத்தேடியே உற்று நோக்கும்;
உடல் மட்டுமே இங்கிருக்க,
அங்குமிங்கும் ஊசலாடும்
இந்த உயிருக்கு மோட்சம் கொடு!

-02-

நீயேதான் நானாக இருக்கிறாய்.
நீ நானானது எப்போதென யோசிக்கும் போதே
நான் தொலைந்து, நீயே வருகிறாய் நானாக!
நீ யாரென சொல்லிவிடு,
நான் நீயாகிவிட்டேன்!

-03-

நீ அருகிலில் இல்லாத நாட்களெல்லாம்
வறண்டு போய்விடுகிறது மனது.
உன்னை தேடியே தவம் கிடக்கிறது என் கண்கள்;
சீக்கிரம் வந்து நிவாரணம் தந்து விடு!

-04-

நம்மிருவருக்கும் இடையிலுள்ள
infinity அளவிலான Emotionகளை,
வெறும் Emoticon's தான் பரிமாறி கொள்கின்றன;
ஆனால் மனமோ 2G போல பரிதவித்து கிடக்கிறது!

-05-

நீ பாதரசம் போல பட்டும் படாமலேயே பழகுகிறாய்.
நான் தான் ஆக்ஸிஜனாய்
பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன்.
இன்னும் நமக்குள்
இந்த கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகவேயில்லை!

- இரா.ச.இமலாதித்தன்

தேவதையாய் நீ!





















-01-

ஐந்தாம் மறையாகிபோன காதலுக்குள்,
உண்மைகள் ஊமையாகி
பொய்கள் சூழ் உரையாடல்களே
நிறைவானதாக உணரப்படுகிறது;
காதலும், காதலிப்பவர்களும் வேறு வேறுதான்!

-02-

நீ உதிர்க்கும் புன்னகைக்கும்
இதழ் வழியே
காதல்பூக்கள் கோடி மலரும்;
அந்த நொடியினிலே
உன்னிரு கண்களுக்குள்
என்னை இழுத்து,
இமைகளால் கட்டி போடும்;
நீ மாயம் செய்யும் தேவதை!

-03-

உன் கை கோர்த்து நடக்கிறேன்,
வானெங்கும் வானவில்;
மனதுக்குள் புதுச்சாரல்மழையாய்
நீ உதிர்க்கும் புன்னைகை;
குடைகள் போல கண்கள் ஏந்த,
நீ என் தேவதையாகி சிரிக்கிறாய்!

-04-

மெல்லிய குரல்களால்
என்னை என்னவெல்லாம் செய்கிறாய்;
சின்ன புன்னகையால்
வீணை போலவே மீட்டுகிறாய்;
உன்னுள் தொலைந்த
என்னை மீட்காமலே அடைக்கலம் கொடு!

-05-

உன்னோடு வாழப்போகும்
பொற்காலத்திற்காகவே,
ஒவ்வொரு நாளையும்
நொடி போல கடத்தி கொண்டிருக்கிறேன்;
சொர்க்கத்தின் வாசற்படிக்கு அருகில்
தேவதையாய் நீ!

-இரா.ச.இமலாதித்தன்

தோளோடு பேசும் காதல்!


















-01-

தொலைவில் இதழ்கள் புன்னகைப்பதும்,
அருகில் விழிகள் புன்னகைப்பதும்,
இதுபோலவே கடக்கிறது
நம் பலமணிநேர உரையாடல்,
ஓரிரு காதல்மொழி வார்த்தைகளால்!

-02-

வறண்ட நிலத்தில் மண்வாசம் வீசும்
கடும் வெயில் கால மழை போலவே,
உன் பார்வையால்
சில்லென தென்றலைத்தான் வீசி போகிறாய்,
புயலடித்து கிடக்கிறது மனது!

-03-

உன் தீண்டல் கலந்த
காற்றை சுவாசித்து கொண்டே,
உன் தோளில் சாய்ந்து மெல்ல தொலைகிறேன்;
சொர்க்கத்தின் வாயிற்கதவு
தானாய் திறக்கிறது, நீ என் தேவதை!

-04-

வாழ்நாளெல்லாம் உன்னோடு பயணிக்க போகும்
அந்த மகிழ்வான நாட்களுக்காகவே
கடுந்தவமிருந்து கொண்டிருக்கின்றன
என் நாட்காட்டியின் ஒவ்வொரு பக்கங்களும்!

-05-

உனக்காகவே
என் வாழ்வின் பயணப் பாதைகளை
புத்தம்புதிதாய் உருவாக்கி கொண்டிருக்கிறேன்;
இனி வழிகாட்டியாய்
என்னோடு பயணிக்க
ஆயத்தமாய் இரு என்னுயிரே!

- இரா.ச.இமலாதித்தன்

கதை பேசும் காதல்!





-01-

உன் தோள் மீது என் கை வைத்து,
உன் காதோரம் என் தலை சாய்த்து,
பெருங்கதை பேசும் நேரங்களில்
சொர்க்கம் எதுவென உணர்கிறேன்;
அந்த கடவுளை அருகில் காண்கிறேன்
நீ பிரம்மனின் மகளோ?!

-02-

நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே
ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறோம்.
இந்த நல்லிரவு கடந்து பின்னால்
நட்சத்திரங்களும் தொலைந்து விடுகின்றன,
நம்மை போலவே!

-03-

உன்னை ஊரறிய தாலிக்கட்டி
என் மனைவியாக ஏற்கும் அந்நாளுக்காகவே
நாட்காட்டியின் பக்கங்களனைத்தும்
நான் கிழிக்காமலே
தானாகவே உதிர்கிறது என்னறையில்!

-04-
உன் கழுத்தில்
என் கைகளால் கட்டப்படும்
மூன்று முடிச்சுகளுக்காக
இன்ப அவஸ்தையோடு காத்திருக்கின்றன,
நாட்காட்டியில் சுபமுகூர்த்த நாட்களெல்லாம்!

-05-

சங்ககால இலக்கியங்கள் தொடங்கி
சமகால ஹைக்கூக்கள் வரையிலும்
தொன்றுதொட்டு இன்றுவரை
உயிர்ப்போடு இருக்கும் ஒரே மொழி
தமிழ் மட்டுமல்ல; காதலும் தான்!

- இரா.ச.இமலாதித்தன்