நிழலும் நீயே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிழலும் நீயே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நிழலும் நீயே!




ஆளரவமற்ற மதியநேர பயணத்தின்
அரங்கேறிய ஆகாய மார்க்க
ஆதித்த தாண்டவத்தில்
அல்லல் பட்டுக்கொண்டே
அவசரகதியில் கால்களிரண்டும்
நகர்ந்து கொண்டிருக்க;
நீண்ட நெடுந்தொலைவில்
என் தாயைப்போல் ஒருத்தி
என்னை இளைப்பாற்றி அரவணைக்க
அழைப்பு விடுக்கிறாள்
ஒற்றைக்காலோடு
நிழல் தரும் மரமாய்!

- இரா.ச.இமலாதித்தன்