நீ நான் காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீ நான் காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நீ நான் காதல்!

















-01-

உன்மழலை கொஞ்சும்
சிரிப்பில் கலந்த
செல்லப்பேச்சுகளில்
என்னை தொலைத்து
அடையாளமற்றவனான பின்னால்தான்
புரிந்துகொண்டேன்;
நான் என்பதே நீதான் என்பதை!

- 02-

பிஞ்சு இதழ்கள் போன்ற மழலை காலால்
செல்லமாய் எட்டி உதைக்கிறாய்,
பக்குவபட்டவனாய் உன் பாத சுவட்டில்
முத்தம் கொடுக்கிறேன்;
உன்னுள் வாழ்தலே அழகு!

-03-

சின்னஞ்சிறு அறையின் ஜன்னல் வழியே
உடலெங்கும் முத்தமிடுகிறது மழைச்சாரல்;
நானோ உன் மழலை கொஞ்சும் சிரிப்பில்
தொலைந்த நினைவுகளுக்குள் நனைகிறேன்!

-04-

கண்சிமிட்டும் நொடியில்
உன் கருவிழிகளுக்குள் பிறக்கிறேன்;
நீ ஆக்குபவள்.
உன் புன்னகையில்
என்னை தொலைக்கிறேன்
நீ அழிப்பவள்.
எப்போது கா(தலி)ப்பாய்?

-05-

ஒவ்வொரு நொடிகளும்
பல மணிநேரம் போல
மெதுவாய் கடப்பதால்,
கடிகார முட்களோடு
பெருயுத்தம் நடத்தி கொண்டிருக்கிறேன்,
என்னருகில் நீ இல்லாத நாட்களில்!

- இரா.ச.இமலாதித்தன்

நீ நான் காதல்!




-001-

விடிகாலை பொழுதுகளில்

சாலையோரம் 
நீ பயணிக்கும் நேரமெல்லாம்
சூரியனும் விரைவாகவே
எழுந்து விடுகிறது
உன்னை தரிசிப்பதற்காக!

-002-

மாலை பொழுதில்

உன்புன்னைகைக் கண்டு 
நிலவுகூட சற்றுதடுமாறுகிறது
எனக்கு போட்டியாக
இவள் யாரென்று!

-003-

சூரிய உதயத்தை

உன் முகத்திலேயே
கண்டுவிடுகிறேன்
இரு புருவ மத்தியில்
பொட்டாக...!

-004-

நீ சிரிக்கின்றபோதெல்லாம்
நினைத்துகொள்வேன்
என்னைப்போல இன்னும் 
எத்தனை பேரை பைத்தியமாக்க
முயற்சித்தாயென்று...!

-005-

உன்னால் மட்டும்

எப்படி சாத்தியமாகிறது
ஆயுதமே இல்லாமல்
கண்களுக்குள் ஊடுருவி
கனத்த என் நெஞ்சை
கவர்ந்திழுக்க!

-006-

உன் இருவிழி
தரிசனம் கிடைக்காத நாட்களில்
பட்டினியாகவேகிடக்கிறது
என் நெஞ்சம்...!

-007-

நீ கோபப்படும் நேரங்களில்
என்னை பார்த்து சிரிக்கிறது

நீ புன்னகைக்கும் நேரங்களில்
என்னை பார்த்து சண்டையிடுகிறது
உன் விழிகளுக்கும் இதழ்களுக்கும்
என்னவொரு முரண்பாடு!

- இரா.ச.இமலாதித்தன்