ஞானியின் தேடல்!



உறவுகளால் ஒதுக்கிவிடப்பட்டு
அறைக்குள்ளேயே அடைப்பட்டு கிடந்தவனின்
மரணத்தேதி தெரிந்ததிலிருந்து
நாட்காட்டியின் நாளிதழனைத்தும்
கிழிக்கப்படாமலே கடந்துகொண்டிருந்தது;
இப்போதோ ஞானியாகிவிட்டதாய்
தன்னையுணர முயல்கிறான்;
மயானம் செல்லும் நாளில்
வெறும் உடல் என்றும்;
பிறகொருநாள்
உறவாலும் பெயராலுமே
அடையாளப்படுவதை உணர்ந்தபிறகும்
அவனுக்குள்ளாகவே அவனை
தேடிக்கொண்டே இருக்கிறான்
ஞானியின் தேடல்
முடிந்ததாக தெரியவில்லை!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக